Sunday, June 14, 2009

சுட‌ருள் இருள் நிக‌ழ்வு: சில குறிப்புகள்


புகைப்படங்கள்: இரமணன்

குறிப்புகள்: தீபன்

சுடரில் இருள் என்கின்ற சமூக இலக்கிய நிகழ்வொன்றில் சகலரையும் சந்திப்பதில் நாங்கள் பெரிதும் மகிழ்வடைகிறோம்.


வந்திருந்தவர்கள்

மனிதன் வாழும் சூழலில் மாற்றம் என்பதும் அதனை புரிதல் என்பதும் எல்லாக் காலங்களிலும் தொடச்சிக்குட்பட்டே வருகிறது. அந்த வகையில் நாங்கள் சார்கின்ற சூழலின் ஒரு பகுதியை இலக்கியமாகவும் ரசனையாகவும் எதிர்கொள்ள நண்பர்கள் நாங்கள் முனைந்ததன் விளைவே இன்றைக்கு நாங்கள் சேர்ந்திருக்கின்ற இந்த சுடருள் இருள் என்கின்ற நிகழ்வு. இது உங்களின் ஆதரவுடன் நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்வாக திட்டமிடப்படுகிறது. இதன் உள்ளார்ந்த தொனி என்பது எமக்கும் ஈழம், இந்திய மற்றும் அனைத்து புலம் பெயர் படைப்புலகத்துக்கும் இடையான தொடர்பாடல் என்பதே. எல்லா தனி மனிதர்களுக்குள்ளும் அவர் சார்ந்த தத்துவங்களும் அரசியல் கோட்பாடுகளும் இருக்குமென்பதை ஏற்றுக்கொள்கின்ற அதே சமயம் எந்த ஒர் இலக்கியக் கோட்பாட்டையோ அரசியலையோ தனித்து முன்வைக்காது அனைவரிதும் குரல்களும் இவ்வாறான ஒரு பொதுவெளியில் ஒலிக்கவே விரும்புகின்றோம்.



ஆளுமைகளும், அனுபவங்களும்: நிலக்கிளி அ. பாலமனோகரன்

நிலக்கிளி அ.பாலமனோகரன் என்று இலக்கியப்பரப்பில் அறியப்படுபவர். இவரது முதல் நாவலான நிலக்கிளி 1973 இல் வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. மேலும் வட்டம்பூ மற்றும் குமாரபுரம் நாவல்கள் வீரகேசரி பத்திரிகையிலும் பல சிறுகதைகள் சிந்தாமணி மற்றும் வீரகேசரி பத்திரிகையிலும் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் வெளியாகி ஈழத் தமிழ் இலக்கியப்பரப்பில் வாசகரின் கவனம் பெரிதும்ஈர்த்தவை இவர் 1984 இல் டென்மார்க் நாட்டுக்கு புலம் பெயர்ந்து அங்கிருந்து ஈழமுரசு பத்திரிகையில் சிறுகதைகள் எழுதினார். இவரின் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று danish மற்றும் தமிழில் வெளியானதோடு Danish தமிழ் அகராதியை தொகுத்ததிலும் முக்கியத்துவம் பெற்றவர். எழுத்தாளராக மட்டுமன்றி ஒவியராகவும் அறியப்படுபவர். தற்போது கனடாவிற்கு வருகைதந்துள்ள இவரின் வட்டம்பூ நாவல் ஆங்கிலத்தில் Bleeding Hearts என்ற பெயரில் அண்மையில் கனடாவில் வெளியாகி தமிழ்நெற் மற்றும் Monsoon சஞ்சிகையால் பாராட்டுப் பெற்றது.



ஆளுமைகளும், அனுபவங்களும்: தேவகாந்தன்

எழுத்திலும் இலக்கியத்திலும் சிறுகதைகள் நாவல்கள் மற்றும் கட்டுரைகள் விமர்சனங்களால் அறியப்படுகின்ற தேவகாந்தனின் படைப்புலகு விசாலமானது. எழுபதுகளில் இருந்து எழுதிவருகின்ற தேவகாந்தன் நெருப்பு மற்றும் இன்னொரு பக்கம் சிறுகதை தொகுப்புகளையும் உயிர்பயணம், விதி கதாகாலம் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் லங்காபுரம் நிலசமுத்திரம் மற்றும் கனவுச்சிறை ஆகிய நாவல்கள் மூலமும் பேசப்படுபவர். இதில் கனவுச்சிறை நாவல் ஐந்து பாகங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தகாலங்களில் வெளிவந்த இலக்கு காலாண்டிதழ் மற்றும் சமகாலத்தில் இங்கிருந்து வெளிவரும் கூர் சஞ்சிகையின் ஆசிரியருமாவார். தாய்வீடு, வைகறை, காலம் சஞ்சிகைகள் மற்றும் பல இணைய மின் இதழ்களிலும் எழுத்து வினை புரியும் இவர் கதாகாலம் என்ற சொந்த தனி வலைபதிவுகளிலும் விரிவாகவும் செறிவாகவும் எழுதிவருபவர்.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தீபன்

தொடரும் அடுத்த நிகழ்வு ஒரு நினைவுக்குறிப்பு: அண்மையில் அகால மரணத்துக்குள்ளாகி அமரத்துவம் அடைந்த கவிதை ஆர்வலர், திறனாய்வாளர் மற்றும் கவிஞர் அமரர் ராஜமார்த்தாண்டனின் நினைவலைகளை குறித்து சிலநிமிடம் பேச திரு. காலம். செல்வத்தை அழைக்கிறோம். காலம் செல்வம் அவர்கள் “கட்டடக் காடுகள்” கவிதை தொகுப்பினூடாகவும் தொடர்ச்சியாக இங்கிருந்து வெளிவரும் காலம் இலக்கிய இதழ் ஊடகவும் “வாழும்தமிழ்” நூற்கண்காட்சியூடாகவும் சகலருக்கும் பரிச்சயமானவர்



வ்ந்திருந்தவர்கள்


'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' பற்றி க.நவம்

நவம் அவர்கள் இவர் கவிஞரும் திறனாய்வாளருமாவார் இவரது உள்ளும் புறமும் - இலங்கையில் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பாகும் மேலும் கடந்த காலத்தில் வெளிவந்த நான்காம் பரிணாமம் சஞ்சிகையின் ஆசிரியருமாவார்


'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' பற்றி தர்சன்

நாடக நடிகராகவும் நெறியாளராகவும் திகழும் தர்ஷன் வைகறை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகவும் தன்னைப் பதிவு செய்தவர்.



தீபச்செல்வனின் உரை (வாசிப்பது சுதன்)





(தொடர்ந்து நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பதிவில் ஏற்றப்படும்)

1 comment:

Sivalingam said...

Even within melancholic situation of Tamils, this events is encourageing to keep nourish our litratures, which is necessary to keep record for our future Thamil Eelam. Wishing for greater success to Ehiligal.